8 வயது சிறுமியை மாறி மாறி சீரழித்த 12 வயது சிறுவர்கள் - கேட்கவே பதற வைக்கும் சம்பவம்

Update: 2024-07-11 12:13 GMT

ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம், முச்சுமர்ரி கிராமத்தைச் சேர்ந்த 4ம் வகுப்பு பயிலும் மாணவி, பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பள்ளியில் பயிலும் 12 வயது மாணவர்கள் இருவர் மற்றும் 13 வயது மாணவர் என 3 பேரும், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தனர். பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவிப்பதாக மாணவி கூறிய நிலையில், மாணவியை கொன்று உடலை பாசன கால்வாயில் வீசிவிட்டு தப்பியுள்ளனர். இதனிடையே, மாணவியின் தந்தை அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவியின் உடலைக் கைப்பற்றி, மூன்று சிறுவர்களையும் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்