இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (15-10-2024) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-10-15 16:09 GMT
  • இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (15-10-2024) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlinesஅடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
  • சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை...
  • 4 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருப்பதாக
  • வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் அறிவிப்பு...
  • காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மறுநாள் அதிகாலை சென்னை அருகே கரையை கடக்கும் என தகவல்.
  • 12 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட்
  • அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சை உள்ளி​ட்ட 12 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட்...
  • அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என அறிவிப்பு...
  • பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுற
  • சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ((ராணிப்பேட்டை)) ஆகிய மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...
  • சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது...
  • சென்னை உயர்நீதிமன்றம், அரசு அலுவலகங்களுக்கும் நாளை விடுமுறை அறிவிப்பு...
  • புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் நாளை பள்ளி, கல்லூரிகள் செயல்படாது என தகவல்...
  • சென்னையில் கொட்டும் மழையில் குடைபிடித்தபடி முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு...
  • மழை பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு...
  • மாநகராட்சி பணியாளர்களுடன் தேநீர் அருந்தி உற்சாகம்...
  • கோடம்பாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு...
  • தமிழக அரசின் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு...
  • சென்னை பள்ளிக்கரணையில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிப்பு...
  • உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் தேடும் மக்கள்...
  • வேளச்சேரி பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் படகு மூலம் மீட்பு...
  • தொடர் கனமழையால் சென்னை மாம்பலம் பகுதியில் மின் வயர் அறுந்து தண்ணீரில் தீப்பொறி வந்ததால் பரபரப்பு...
  • பட்டாசு போல் வெடித்து புகை வெளியேறியதால் பொதுமக்கள் அதிர்ச்சி...
  • சென்னை ஓ.எம்.ஆர். சாலை, பெருங்குடி எம்.ஜி.ஆர் சாலையை பயன்படுத்த முடியாத அளவுக்கு குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர்...
  • ஒரு பக்கம் பள்ளம், மற்றொரு பக்கம் மழை நீர் சூழ்ந்துள்ளதால் உயிரை பிடித்துக்கொண்டு பயணித்த வாகன ஓட்டிகள்...
  • ஆங்காங்கே வாகனங்கள் பழுதாகி நின்றதால் கடும் அவதி...
Tags:    

மேலும் செய்திகள்