60 ஆண்டுகள் பழமையான பாலம் இரண்டாக உடைந்தது | Puducherry

புதுச்சேரியில் 60 ஆண்டுகள் பழமையான துறைமுக பாலத்தில் விரிசல் ஏற்பட்டு இரண்டாக உடைந்தது.

Update: 2022-03-06 05:55 GMT
புதுச்சேரியில் 60 ஆண்டுகள் பழமையான துறைமுக பாலத்தில் விரிசல் ஏற்பட்டு இரண்டாக உடைந்தது. 1962ம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சியில் கடற்கரை பகுதியில் துறைமுக பயன்பாட்டிற்காக பாலம் கட்டப்பட்டது. இதன் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்பட்டன. இதனிடையே பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள தூண்கள் சேதமடைந்து இருந்ததால் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக காணப்படும் கடல் சீற்றத்தால் எழுந்த உயர் அலைகளால் பாலத்தின் மையப்பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாலத்திற்கு அருகில் மீனவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்