பெங்களூருவை அலறவிட்ட ஓர் இரவு - தீயாய் பரவும் அதிர்ச்சி வீடியோ

Update: 2024-10-04 07:58 GMT

பெங்களூருவின் தெருக்களில் பட்டாக்கத்தியுடன் சினிமா பாணியில், மக்களை மிரட்டும் வகையில் சுற்றித் திரிந்த கும்பலை, போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

கர்நாடக தலைநகர் பெங்களூருவின் தெருக்களில் பட்டாக்கத்தி ஆயுதங்களுடன் சுற்றித் தெரியும் போதை இளைஞர் கும்பல் ஒன்று, சாலையில் மற்றும் வீட்டினுள் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை சேதப்படுத்தியது. இது தொடர்பாக புகார் அளிக்க முன்வருபவர்களையும் கொலை செய்துவிடுவதாக சினிமா பாணியில் மிரட்டியுள்ளனர். நான்கு ஐந்து பேரை அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து, டி.ஜே. ஹள்ளி காவல் நிலையத்தில் அரிவாளால் தாக்கப்பட்டவர் புகார் அளித்தார். இதையடுத்து, 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு 3 இளைஞர்கள் மற்றும் சில 17 வயது சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்