"சாவர்க்கர் மாட்டிறைச்சி சாப்பிட்டாரா?'' - சர்ச்சையானதும் அடித்த அந்தர் பல்டி

Update: 2024-10-04 09:13 GMT

சாவர்க்கர் குறித்த பேச்சு சர்ச்சையான நிலையில், கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் விளக்கம் அளித்துள்ளார். காந்தி ஜெயந்தி தினத்தன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கர்நாடக அமைச்சர் தினேஷ் குண்டுராவ், சாவர்க்கர் மாட்டிறைச்சியை சாப்பிட்டதாகவும், பசுவதையை எதிர்க்கவில்லை என்றும் பேசியதாக சர்ச்சை எழுந்தது. மேலும், காந்தி, இந்து கலாச்சார பழமைவாதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுடன் கடுமையான சைவ உணவு உண்பவராக இருந்ததாகவும் பேசியதாக கூறப்படுகிறது. அவரது பேச்சு கர்நாடகாவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், தான் அப்படி ஒன்றும் கருத்து தெரிவிக்கவில்லை என்றும், சாவர்க்கரை காட்டிலும் மகாத்மா காந்தி அதிக கடவுள் நம்பிக்கை உள்ளவர்... இந்துத்துவாவிற்கு அதிக மதிப்பளித்தவர் என்று குறிப்பிட்டதாக தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். மேலும், அந்த நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி மற்றும் சாவர்க்கரின் கொள்கைகள் குறித்து மட்டுமே விவாதித்ததாகவும், தான் எந்த கருத்தையும் முன்வைக்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்