பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் - டிவிட்டரில் எச்சரிக்கை விடுத்த ராகுல்காந்தி

பிரதமரின் தேர்தல் சலுகை முடிந்ததாக மறைமுக சாடல்

Update: 2022-03-06 05:34 GMT
பெட்ரோல் விலை உயரும் அபாயத்தை மறைமுகமாக ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார். உக்ரைன், ரஷ்யா இடையிலான போரால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. அதேநேரம் ஐந்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலும் முடிவுக்கு வர உள்ளன. இந்த நிலையில் அனைவரும் டேங்குகளில் பெட்ரோலை நிறைவு செய்து வைத்து கொள்ளும்படி ராகுல்காந்தி ட்வீட் செய்துள்ளார். பிரதமர் மோடியின் தேர்தல் சலுகைகள் முடிவுக்கு வரவுள்ளதாகவும் கூறிய அவர், தேர்தலை ஒட்டி சில திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக மறைமுகமாக மத்திய அரசை சாடினார். 

Tags:    

மேலும் செய்திகள்