கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு மாதாகோவிலின் 25 சவரன் தங்க நகைகள்
கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு அங்குள்ள மாதாகோவிலின் 25 சவரன் தங்க நகைகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
எர்ணாகுளம் மாவட்டம் வராப்புழை பகுதியில் உள்ள மாதா கோவிலில் திருவிழாவின் போது இந்த நகைகள் அணிவிக்கப்படுவது வழக்கம். இதனை ஆலய நிர்வாகிகள் கேரள தொழில்துறை அமைச்சர் ஜெயராஜனிடம் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.