ஈரானின் மூச்சை பிடிக்க இஸ்ரேல் போட்ட பிளான்... குலை நடுக்கத்தில் ஈரான் | Israel | Iran | War

Update: 2024-10-03 02:08 GMT

ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா படுகொலையை தொடர்ந்து லெபனானில் இஸ்ரேல் தரைவழி தாக்குதலை தீவிரமாக்கி வருகிறது. ஈரான் தாக்குதல் கோபத்திலிருக்கும் இஸ்ரேல், தெற்கு லெபனானுக்கு கூடுதல் படைகளை அனுப்பியது. தெற்கு லெபனானில் கிராமங்களை காலி செய்ய உத்தரவிட்ட இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தொடங்கியது. ஹிஸ்புல்லா தீவிரவாதிகளோடு இஸ்ரேல் ராணுவம் சண்டையிட்டு வருகிறோம், தீவிரவாதிகளையும், தீவிரவாத கட்டமைப்புகளையும் அழித்து வருகிறோம் என இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. துப்பாக்கி ஏந்தியவர்கள் மற்றும் தீவிரவாதிகள் நிலைகள் மீது வான்வழியாகவும் தாக்குதல் நடத்துவதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய வீரர்கள் கிழக்கு பக்கத்தில் நுழைந்து இருப்பதாகவும், அவர்களோடு மொரான் அல்-ராஸ் நகரில் சண்டையிட்டு வருவதாக ஹிஸ்புல்லாவும் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் இஸ்ரேல் வீரர்கள் 8 பேர் உயிரிழந்து இருப்பதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்