"ரூல்ஸ்லாம் மக்களுக்கு மட்டும் தானா?" ரூல்ஸை மதிக்காத பெண் போலீஸ் - தீயாய் பரவும் வீடியோ

Update: 2024-06-03 04:51 GMT

திருச்சியில், ஹெல்மெட் அணியாமல செல்போனில் பேசியபடி சென்ற பெண் காவலரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. காவிரி ஆறு அருகே உள்ள ஓயாமாரி சாலையில் சென்ற பெண் காவலர் ஒருவர் போக்குவரத்து விதிகளை மீறியது குறித்து, அவ்வழியாக காரில் சென்ற நபர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அப்படித்தான் செல்வேன், உங்களால் என்ன செய்ய முடியும் என காவலர் பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பெண் காவலர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்