`ரீல்ஸ் மோகம்' பாட்டியை பலி கொடுத்த கொடூர சைக்கோ சிறுமி..! சேலத்தில் பகீர் சம்பவம்

Update: 2024-08-31 02:03 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள செம்மாண்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் போதம்மாள். மூதாட்டியான இவர், வீட்டில் தனியே இருந்தபோது, 16 வயது சிறுமி ஒருவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்திருக்கிறார். தொடர்ந்து, மூதாட்டி அணிந்திருந்த தங்க தோடுகளை கேட்டு தகராறு செய்த சிறுமி, மூதாட்டியை கட்டையால் தாக்கி அவர் அணிந்திருந்த நகைகளை திருடி சென்றிருக்கிறார். படுகாயமடைந்த மூதாட்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், போலீசில் புகாரளித்தனர். தொடர்ந்து சம்பத்தில் ஈடுபட்ட சிறுமியை போலீசார் கைது செய்த நிலையில், அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருக்கிறார். ரீல்ஸ் வீடியோக்கள் எடுக்க செல்போன் இல்லை என்பதால், மூதாட்டியை தாக்கி அவரின் நகைகளை பறித்து செல்போன் வாங்க சென்றதாக தெரிவித்திருக்கிறார். ஓமலூரில் உள்ள நகைக்கடையில், தனது தந்தைக்கு உடல் நிலை சரியில்லை எனக்கூறி நகையை அடமானம் வைத்து 9 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றதும் தெரியவந்திருக்கிறது. அத்தனைக்கும் இடையே, லைசென்ஸ் இல்லாமல் சிறுமி ஸ்கூட்டர் ஓட்டியதும் தெரியவர, ஸ்கூட்டரை பறிமுதல் செய்த போலீசார், சிறுமியை சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்