தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாக நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற உலக காசநோய் தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பார்த்திபன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக தமிழக ஆளுநர் எடுக்கும் முன்னெடுப்புகள் சிறப்பாக உள்ளதாக தெரிவித்தார்.