"Files-களை காட்டி மிரட்டிய Amitshah..அதிர்ந்து கூட்டணிக்கு சம்மதித்த EPS" - பகீர் கிளப்பிய Murasoli

Update: 2025-03-27 05:15 GMT

இதுதொடர்பாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் வெளிவந்துள்ள கட்டுரையில், டெல்லி சென்ற எதிர்க்கட்­சித் தலை­வர் எடப்­பாடி பழ­னி­சாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து சால்வை அணிவித்து மகிழ்ந்திருப்பதாகவும், அப்போது எடப்­பாடி பழனிசாமியின் உற­வி­னர் 650 கோடி ரூபாய் வரி­ முறைகேட்டில் ஈடு­பட்­ட­தற்கான ஆதாரங்களை காட்டி, எச்சரிக்கை விடுத்து, பா.ஜ.க. கூட்டணிக்கு சம்மதிக்க வேண்டும்... இல்லாவிட்டால் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மிரட்டலுக்கு அஞ்சி, பா.ஜ.க.வோடு கூட்­டணி என்ற பேச்­சுக்கே இட­மில்லை என்று கூறி­வந்த எடப்­பாடி பழ­னி­சாமி, பா.ஜ.க.வு­டன் கூட்­ட­ணிக்­குச் சம்­ம­தம் தெரி­வித்து வந்­த­தா­கச் செய்­தி­கள் வெளியானதாக அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அ.தி.மு.கவின் மூத்த தலை­வர்­க­ளின் ஊழல்­கள் குறித்­த ஆவணங்களை எடப்­பாடி பழ­னி­சாமி­யி­டம் அமித்ஷா காட்டி எச்­ச­ரிக்­கும் தொனி­யில் பேசியதாகவும், அமித்ஷா காட்­டிய ஆவ­ணங்­க­ளைப் பார்த்­த­தும் எடப்பாடி பழனிசாமியே அதிர்ந்துவிட்டதாகவும் கூறப்­ப­டுவதாக, அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கும், தமிழ்­நாட்டு மக்­க­ளுக்­கும் நிதி­ தராமல் தொடர்ந்து வஞ்­சித்­து­வ­ரும் மத்திய பா.ஜ.க.வுடன் கூட்­டுச் சேரப் பணிந்­தி­ருப்­பது அ.தி.மு.க.வின் சுயநல ரூபத்­தைத்­தான் காட்டுவதாகவும், இது தமிழ்­நாட்டிற்கு நல்­ல­தல்ல என்றும் முரசொலி நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்