கோவை வேளாண் பல்கலைக் கழகத்தின் 45வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிலையில், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் புறக்கணித்துள்ளார். விழாவில், ஆயிரத்து 833 மாணவர்களுக்கு பதக்கங்கள், விருதுகள் வழங்கப்பட்டன. முன்னதாக பட்டமளிப்பு விழா தொடங்கியதும், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை ஆளுநர் ஆர்.என்.ரவி உச்சரித்து பாடினார்.