சென்னை அம்பத்தூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்தை வரவேற்க கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்ததால், அவர்களை ஆனந்த் கடிந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தொண்டர்கள் பட்டாசு வெடித்ததற்காக தாம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும், இனி அவர்கள் பட்டாசு வெடிக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.