கேரளா அமைச்சர் வீணா ஜார்ஜ் குவைத் செல்ல கடைசி நேரத்தில் அனுமதி மறுத்த மத்திய அரசு

Update: 2024-06-14 02:29 GMT

கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், குவைத் செல்வதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்து விட்டது. குவைத்தில் நேரிட்ட தீ விபத்தில் கேரளாவைச் சேர்ந்த 24 பேர் உயிரிழந்ததால் வீணா ஜார்ஜை குவைத்திற்கு அனுப்பி வைக்க கேரளா அரசு முடிவு செய்தது. இதற்காக கொச்சி விமான நிலையம் வந்த அவருக்கு மத்திய அனுமதி மறுத்து விட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார். ஏற்கெனவே, மத்திய இணை அமைச்சர் குவைத்தில் இருந்து பணிகளை மேற்கொள்வதால் வேறு அமைச்சர்கள் செல்ல வேண்டியதில்லை என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்