வலுக்கும் மொழிப் பிரச்சினை - பந்த் அறிவித்த கன்னட அமைப்புகள்.. எல்லையில் பதற்றம்
கர்நாடக மாநிலம் பெலகாவியில், Belagavi அரசுப் போக்குவரத்துக்கழக நடத்துனரை, மராத்தி மொழியில் பேசக்கூறி தாக்கிய சம்பவத்தை கண்டித்து, கன்னட அமைப்புகள் சார்பில் பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.