கள்ளகாதலால் நிகழ்ந்த பயங்கரம் - புதிய ஆண் நண்பருடன் சேர்ந்து கள்ளகாதலனை தீர்த்து கட்டிய கொடூர பெண்

Update: 2022-09-24 14:24 GMT

மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளராக பணியாற்றி வருபவர் சௌந்தர்யா. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கணவனை பிரிந்து தனது மகன்களுடன் சாலிகிராம பகுதியில் வசித்து வருகிறார்.

சௌந்தர்யாக்கும் மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவு பணியாளராக பணியாற்றும் விஜி என்பவருக்கும் சில மாதங்களாக பழக்கம் ஏற்பட்டு இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் மற்றொரு மாநகராட்சி ஒப்பந்த ஊழியரான பிரபு என்பவரும் சௌந்தர்யாவுடன் தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுக்குறித்து விஜிக்கு தெரியவர , அவர் பிரபுவை தொடர்பு கொண்டு மிரட்டியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பிரபு , நேற்று இரவு சௌந்தர்யா வீட்டிற்கு சென்றுள்ளார்.

சௌந்தர்யா உடன் இணைந்து விஜியயை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு எதுவுமே நடக்காது போல் இருவரும் மறுநாள் காலை பணிக்கு சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து, காதலனை கத்தியால் குத்தி கொன்ற சௌந்தர்யா மற்றும் பிரபு ஆகிய இருவரை, விருகம்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்