டெல்லி முன்னாள் அமைச்சர் வழக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2023-07-10 17:32 GMT

சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு வழங்கிய இடைக்கால ஜாமீனை உச்சநீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், ஜெயினுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள 3 மருத்துவமனைகள் பரிந்துரைத்துள்ளதாகவும், இரு மருத்துவமனைகளின் அறிக்கை 8ம் தேதி கிடைத்ததாகவும் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்தார்.

மருத்துவ அறிக்கைகளை எய்ம்ஸ் மருத்துவமனை ஆய்வு செய்யட்டும் என அமலாக்குத்துறை சார்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், 3வது மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, இடைக்கால ஜாமினை நீட்டித்து விசாரணையை ஜூலை 24ம் தேதிக்கு தள்ளி வைத்தது

Tags:    

மேலும் செய்திகள்