மர்மமான முறையில் இறந்த விவசாயி.. உறவினர் சொன்ன பகீர் தகவல்

Update: 2024-10-26 03:12 GMT

மர்மமான முறையில் இறந்த விவசாயி.. உறவினர் சொன்ன பகீர் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டம் படதாசம்பட்டியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி விவசாய வேலைகளைச் செய்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி நாரளப்பள்ளியில் கிராம நிர்வாக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனை ஊர் மக்கள் கூடி சமாதானம் செய்து வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவிந்தசாமி ஊத்தங்கரை அருகே மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்து இருக்கிறார்.இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இது கொலை தான் என்று கோவிந்தசாமியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்