"சிபில் ஸ்கோரை காரணம் காட்டி கல்விக் கடன் மறுக்க கூடாது" - உயர்நீதிமன்றம் அதிரடி

Update: 2023-06-01 02:02 GMT

குறைந்த சிபில் ஸ்கோரை காரணம் காட்டி மாணவர்களுக்கு கல்விக் கடன் மறுக்கக் கூடாது என கேரளா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆலுவா பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியின் மனுவை விசாரித்த நீதிமன்றம், எதிர்காலத்தில் நாட்டை வழி நடத்தும் தேசத்தை உருவாக்குபவர்கள் மாணவர்கள். எனவே, மாணவர்களின் விண்ணப்பங்களை மனிதாபிமானத்துடன் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், மாணவி கோரிய கல்வி கடனை உடனடியாக வழங்கவும் எஸ்பிஐ வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்