ரூ.60 லட்சம் கடன் வாங்கி மோசடி..பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு

Update: 2023-07-09 14:37 GMT

புதுக்கோட்டை அருகே, கடனாக வாங்கிய 60 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பிக் கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்ததாக பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கீரமங்கலம் அருகே உள்ள கரம்பக்காடு இனாம் கிராமத்தைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் அளித்த புகாரில், முருகானந்தம் என்பவர் தொழில் செய்வதாகக் கூறி, 60 லட்சம் ரூபாய் பணம் வாங்கியதாகவும், ஆனால் அந்தப் பணத்தை திருப்பித் தராமல் மோசடி செய்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் முருகானந்தம் செல்போனில் தொடர்புகொண்டு, தனக்கு கொலை மிரட்டல் விடுத்தததாகவும், குடும்பத்திற்கு பாதுகாப்பு இல்லை என்றும் அந்த மனுவில் சாகுல் ஹமீது குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட முருகானந்தம், புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பா.ஜ.க பொருளாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்