பெற்றோருடன் தூங்கிகொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை - சென்னையில் பயங்கரம்

Update: 2023-05-25 11:27 GMT

சென்னை, பட்டினம்பாக்கத்தில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போலீசாரிடமிருந்து தப்பியோடியுள்ளார்.

பட்டினாம்பாக்கம் அருகே வசித்து வந்த தம்பதி தனது 6 வயது மகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்துள்ளனர். அப்போது, திடீரென மகளின் அழுகுரல் கேட்டு எழுந்த அவர்கள், மகளுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லைகள் கொடுப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே, தம்பதி கூச்சலிட்ட நிலையில், தப்பியோடிய அவரை பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் பட்டினம்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் என்பதும், எந்நேரமும் கஞ்சா போதையில் இருப்பதும் தெரியவந்தது. இந்நிலையில், பொதுமக்கள் தாக்கியதால் காயமடைந்த விக்னேஷை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது, மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்