14 மணி நேரம் பங்களாவிலும், பீச்சிலும் பலாத்காரம் செய்யப்பட்ட 16 வயது சிறுமி - உறைய வைக்கும் சம்பவம்

Update: 2022-12-19 02:50 GMT

மகாராஷ்டிராவில் 16 வயது சிறுமி ஒருவரை 14 மணி நேரம் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மகாராஸ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள சட்பதி காவல் நிலையத்தில் 16 வயது சிறுதி ஒருவர் புகார் அளித்துள்ளார்.

அதில், மஹிம் கிராமத்தில் யாரும் இல்லாத பங்களாவில் வைத்து, 8 பேர் கொண்ட கும்பல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்த‌தாக கூறியுள்ளார்.

வெள்ளிக்கிழமை இரவு 8 மணியில் இருந்து, சனிக்கிழமை காலை 10 மணி வரை பங்களாவிலும், அருகில் உள்ள கடற்கரையிலும் வைத்து வன்கொடுமை செய்த‌தாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, போக்சோ, கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 8 பேரையும் கைது செய்துள்ளனர்.

16 வயது சிறுமியை 8 பேர் கொண்ட கும்பல் 14 மணி நேரம் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்