பள்ளி பேருந்தில் தீ விபத்து - 23 பேர் பலியான பயங்கரம்....

Update: 2024-10-01 17:20 GMT

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் பள்ளி மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 44 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அஞ்சப்படும் நிலையில், முதற்கட்டமாக 23 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 15க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்