பற்றி எரிந்த எண்ணெய் ஆலை... விண்ணை முட்டி வெடித்து சிதறும் தீ - அலறி ஓடிய தொழிலாளர்கள்

Update: 2024-09-18 10:15 GMT

கிரீஸ் நாட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன. ஏதென்ஸ் நகரம் அருகே செயல்பட்டு வரும் இந்த ஆலையில், நேற்று மாலை திடீரென தீப்பற்றி, காற்றின் வேகத்தால் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதனையடுத்து, ஆலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனால், அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. மேலும், பல அடி உயரத்திற்கு நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்ததாலும், அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்ததாலும் அருகே வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இதனிடையே, 3 ஹெலிகாப்டர்கள் மற்றும் 11 வாகனங்களில் வந்த தீயணைப்புப் படையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்