வியாசர்பாடியை அதிரவிட்ட லாரன்ஸ்.. "100 வீரர்களுக்கு உதவிய அந்த மனசு.." சிறுவர்களுக்கு வைத்த கோரிக்கை

Update: 2024-06-02 13:39 GMT

மாற்றம் என்ற சேவை அமைப்பு மூலமாக நடிகர் ராகவா லாரன்ஸ் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக சென்னை வியாசர்பாடி எஸ்.எம். நகரில் கால்பந்தாட்ட வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதில், வடசென்னை பகுதியில் உள்ள 100 கால்ந்தாட்ட வீரர்களுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ், விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பள்ளி சிறுவர்கள் போதைக்கு அடிமையாக கூடாது என்று கேட்டுக் கொண்டார். வடசென்னை பகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்ற வீரர்கள் கோரிக்கை விடுத்ததற்கு, விரைவில் பரிசீலிப்பதாக அவர் பதில் அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்