வெடித்து சிதறி ஒருவர் உயிரை பறித்த `பட்டாசு' - உடனே நடந்த அதிரடி ஆக்‌ஷன்

Update: 2024-09-19 12:14 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள குகன்பாறையில், லட்சுமி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு வழக்கம்போல் பட்டாசு ரசாயன மூலப்பொருள் கலவை செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்த போது, திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், ரசாயன பொருட்களை இறக்கி வைக்க வந்த ஆட்டோ ஓட்டுநர் கோவிந்தராஜ் என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், குருமூர்த்தி பாண்டியன் என்ற ஆலை தொழிலாளி, 90 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். இந்த விபத்து தொடர்பாக, ஆலை உரிமையாளர் பாலமுருகன் மற்றும் போர்மேன் கபில்ராஜ் ஆகிய இருவர் மீது, ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போர்மேன் கபில்ராஜை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவான உரிமையாளர் பாலமுருகனை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்