அடையாளம் தெரியாத மூதாட்டி கழுத்தறுத்து படுகொலை

Update: 2024-09-19 17:54 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கொளத்தூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில், அடையாளம் தெரியாத பெண் மூதாட்டி, கழுத்துறுத்து படுகொலை செய்யபட்டுள்ளதாக மாடு மேய்ப்பவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு திருவண்ணாமலை எஸ்.பி பிரபாகர் தலைமையில் கைரேகை நிபுணர் மற்றும் போலீசார் சென்று, பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பல்வேறு கோணத்தில் போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்