"எனக்கு யாருமே வேண்டாம்" காதலனுக்காக ஓடிவந்த பெண்ணை-அடித்தே கொன்ற சைக்கோ கணவன்-திருச்சியில் பயங்கரம்

Update: 2024-07-02 10:40 GMT

"எனக்கு யாருமே வேண்டாம்"

காதலனுக்காக ஓடிவந்த பெண்ணை

அடித்தே கொன்ற சைக்கோ கணவன்

பிணமான தாயின் அருகே விடிய

விடிய கதறிய பிஞ்சு குழந்தை

குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்துகொண்ட காதல் மனைவியை கணவனே அடித்து கொன்றுவிட்டதாக புகார் எழுந்துள்ளது. ஒரு குடும்பத்தில் சந்தேகப் பேய் நுழைந்தால் என்ன நடக்கும் என்பதற்கு சாட்சி இந்த கதை.......

திருச்சி மாவட்டம் துவாக்குடியில் உள்ளது இந்த காவல்நிலையம். அன்று வழக்கத்துக்கு மாறாக கூட்டம் கூடியிருந்தது.

விசும்பலும் கண்ணீருமாய் பெண்கள் நின்றிருக்க, ஆண்கள் தங்களுக்குள்ளாகவே ஆக்ரோஷமாக விவாதித்து கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்தில், காவல்நிலைய வளாகத்திற்குள் ஒரு கார் நுழைந்திருக்கிறது. கூட்டத்திலிருந்தவர்கள் ஆக்கோரஷமடைய, அந்த காரில் இருந்தவர்களை சுற்றி வளைத்து தாக்க முயன்றனர், போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தி, நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த பரபரப்புக்கும், ஆக்ரோஷத்துக்கும் காரணம் ஒரு மரணம்... ஆம்,.... 25 வருடங்களாக பாலூட்டி சீராட்டி வளர்த்த பெண்ணை பறிகொடுத்தது தான் இந்த களேபரத்துக்கு காரணம்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி ஐயப்பன் நகரை சேர்ந்தவர் பிரவீன் குமார். 30 வயதான இவர் லாரி கிளீனராக வேலை செய்து வந்திருக்கிறார். அதே பகுதியை சேர்ந்த வீரம்மாள் என்பவரை பிரவீன்குமார் 3 வருடங்களாக காதலித்திருக்கிறார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வீராம்மாள் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ஆனால் அதையும் மீறி பிரவீன்குமார், வீரம்மாளை திருமணம் செய்திருக்கிறார்.

7 மாததுக்கு முன் வீரம்மாளுக்கு பெண் குழந்தை பிறந்ததை தொடர்ந்து, அவர் தாய் வீட்டில் இருந்திருக்கிறார். திருமணம் ஆன சில மாதங்களுக்கு பிறகு பிரவீன்குமாரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மனைவி மீது சந்தேகமடைந்திருக்கிறார். அதோடு பிறந்த குழந்தை மீதும் பிரவீனுக்கு சந்தேகம் வலுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.

சம்பவத்தன்று பிரவீன்குமாருக்கும் வீரம்மாளுக்கும் வழக்கம் போல் தகராறு ஏற்பட்டிருக்கிறது. வீரம்மாளின் சகோதரர், வீட்டுக்கு வந்து குடும்ப சண்டையை தீர்த்து வைத்துவிட்டு சென்றிருக்கிறார். ஆனால் அடுத்த நாள் வீரம்மாளுக்கு உடல்நிலை சரியில்லை என பிரவீன்குமார் பெண்வீட்டாருக்கு தகவல் கொடுத்துவிட்டு தலைமறைவாகியிருக்கிறார். வீரம்மாளின் வீட்டார் அங்கு சென்று பார்த்த பிறகு தான் அந்த பயங்கரம் தெரிய வந்திருக்கிறது.

பிரவீன்குமார் வீரம்மாளை அடித்து கொன்றுவிட்டார் என்று பெண்வீட்டர் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த கொலைக்கு அவரது குடும்பத்தினரும் உடந்தையாக இருந்தாக புகார் அளித்திருக்கிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், பிரவீன்குமாரிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அதோடு திருமணமாகி மூன்று வருடங்களே ஆனதால் திருச்சி ஆர்டிஓ விசாரணையும் நடந்துவருகிறது.

முழுமையான விசாரணைக்கு பிறகுதான் இந்த சம்பவத்தின் பின்னணி தெரியவரும்.

Tags:    

மேலும் செய்திகள்