கள்ளக்காதலனுடன் பைக்கில் லூட்டி அடித்த காதல் மனைவி.. பார்த்த பின் முடிந்த கணவன் உயிர்

Update: 2024-07-04 10:22 GMT

மாறாங்கோணம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரும் மெர்லின்சீத்தா என்பவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளநிலையில், மெர்லின்சீத்தாவுக்கு அதே பகுதியை சேர்ந்த ரீகன்ஜோய் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி உள்ளது. கடந்த மாதம் இருவரும் ஒரு பைக்கில் சென்றுள்ளனர். இதனை பார்த்து தட்டிக்கேட்ட கணவனை மெர்லின்சீத்தா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றார். மனைவி கைதான நிலையில், போலீசாரிடம் பிடிபடாமல் போக்கு காட்டிய கள்ளக்காதலன் ரீகன் ஜோயை 27 நாட்கள் கழித்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்