``தமிழகத்தில் வடக்கு பார்த்து இருக்கும் ஒரேயொரு ராஜகோபுரம்.. இடிக்க திட்டம்'' - கதறும் பக்தர்கள்

Update: 2024-07-04 10:57 GMT

மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான 2வது வழித்தடம் அமைக்கும் பணி ராயப்பேட்டை அருகே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பதற்காக, ராயப்பேட்டையில் உள்ள துர்க்கை அம்மன் மற்றும் விநாயகர் கோயில் கோபுரங்களை இடிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், கோபுரத்தை இடிக்கும் பணிகளை மேற்கொள்ள மெட்ரோ ரயில் ஒப்பந்ததாரர்கள் வந்தபோது பக்தர்கள் திரண்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்