சென்னையின் பரபரப்பான சாலையில் பயங்கர சத்தத்துடன் நேர்ந்த விபரீதம் - பல உயிர்களை காத்த ஒரு மனிதன்

Update: 2024-07-04 09:24 GMT

சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் நூத்தஞ்சேரி பிரதான சாலையில் பயங்கர சத்தத்துடன் மின்கம்பி ஒன்று அறுந்து சாலையின் நடுவே விழுந்துள்ளது. மின்கம்பியில் இருந்து தொடர்து புகை வந்ததால் மின்சாரம் பாய்வதை அறிந்த பழைய பொருள் கடை ஊழியர் ஒருவர் அங்கிருந்த மரக்கழிவுகள் மற்றும் பல்வேறு பொருள்களைக் கொண்டு உடனடியாக சாலையின் குறுக்கே தடுப்பை ஏற்பத்தினார்.

பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பேருந்துகள் செல்லும் பரபரப்பான சாலையில் மின்சாரக் கம்பியைச் சுற்றி தடுப்பை ஏற்படுத்தி அசம்பாவிதம் ஏற்படாமல் தடுத்த ஊழியருக்கு பாராட்டுகள் குவிந்தன. தொடர்ந்து மின் ஊழியர்கள் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து மின் கம்பியினை சீர் செய்யும் பணிகளை மேற்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்