கணவனை களவாணியாக்கிய லட்சிய மனைவி... போலீசை மிரள வைத்த அடடே`கொள்கை' | TN Police

Update: 2024-10-11 13:04 GMT

காஞ்சிபும் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கரசங்கால் பகுதியில் வசித்து வருபவர் ஹேமாவதி. வளையக்கரணை வி.ஏ.ஓவாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த விநாயகர் சதுர்த்தியின் போது சுமார் 40 லட்சம் மதிப்புள்ள நகைகளை இவரது வீட்டிற்குள் புகுந்து கொள்ளையர்கள் திருடி சென்றிருக்கின்றனர். இதில், சென்னை, விருகம்பாக்கத்தை சேர்ந்த திவாகர், அவரது மனைவி ரூபி மற்றும் ரூபியின் சகோதரி என நால்வரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். விசாரணையில், பண்டிகை போன்ற விசேஷ நாள்களில் மட்டும் கணவரை கொள்ளையடிக்க அனுப்பி ரூபி பணம் சம்பாரித்தது தெரியவந்திருக்கிறது. இதன்படி கடந்த விநாயகர் சதுர்த்தியின்போது, ஹேமாவதி உறவினர் வீட்டிற்கு சென்றிருப்பதை அறிந்து கைவரிசையை காட்டியதை போலீசார் கண்டுபிடித்திருக்கின்றனர். கும்பலிடம் இருந்து 32 சவரன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார், நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்