25 ஆயிரம் ரூபாய் செலவில் செயற்கைக்கோள்.. வானில் பறக்கவிட்டு அசத்திய மாணவர்கள் | Tiruvannamalai

Update: 2024-09-30 11:52 GMT

திருவண்ணாமலை விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய சிறியரக செயற்கைக்கோள் வானில் பறக்கவிடப்பட்டது. சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியை சேர்ந்த பொறியியல் மாணவர்கள் 25 ஆயிரம் ரூபாய் செலவில் 500 கிராம் எடைகொண்ட யூலாக்-3 செயற்கைக்கோளை வடிவமைத்தனர். மேக கூட்டங்களிடையே உருவாகும் வாய்யுவினால் ஏற்படும் வெப்பநிலையை ஆய்வு செய்யும் செயற்கைக்கோள்களை ஹீலியம் பலூன் உதவியோடு அனுப்பிய மாணவர்கள்,அடுத்தக்கட்ட ஆய்வுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்