சென்னை முக்கிய சாலையில் போலீஸ்- காங். இடையே தள்ளுமுள்ளு.. போராட்டத்தில் முழங்கிய செல்வப்பெருந்தகை

Update: 2024-09-20 07:25 GMT

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை அவதூறாக பேசியதாக, பாஜகவினரைக் கண்டித்து, சென்னை ஜி பி சாலையில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்...

ராகுல் காந்தியை தேச விரோத சக்தி என்றும், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அவதூறாக பேசியதாகவும், பாஜக ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா, மத்திய இணை அமைச்சர் ரங்வீத் சிங் பீட்டு, சிவசேனா கட்சி சட்டமன்ற உறுப்பினர் சஞ்சய் கெய்க்வாட் ஆகியோரை கண்டித்து இப்போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் அஜோய் குமார், சூரஜ் ஹெக்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்