ரூ.3 லட்சம் நிவாரணம் - அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்| Virudhunagar

Update: 2024-09-20 07:03 GMT

விருதுநகர் மாவட்டம், செவல்பட்டி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சரின் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் கோவிந்தராஜ் என்பவர் உயிரிழந்தார். மேலும், குருமூர்த்தி என்பவர் 100 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 3 லட்ச ரூபாய் நிவாரண நிதியும், படுகாயமடைந்தவரின் குடும்பத்தினருக்கு 2 லட்ச ரூபாய் நிவாரண நிதியும் வழங்கி, முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்