Ex ஊ.ம.தலைவர் கண்ட காட்சி- ஸ்பாட்டுக்கு வந்த போலீசார்... பீதியில் நடுங்கும் ஊர்...திக் திக் சம்பவம்

Update: 2024-10-06 09:50 GMT

திருப்பத்தூர் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கு சொந்தமான நிலத்தில் மர்மபூஜை நடத்தப்பட்டதாக கூறி கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

ஆண்டியப்பனூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சத்தியமூர்த்தி, தனது தென்னந்தோப்பில் வழக்கம்போல உலாவியுள்ளார். அப்போது, சந்தேகத்துக்குரிய வகையில் நீரோடை அருகே மர்மநபர்கள் ஏதோ ஒரு பொருளை புதைத்து வைத்து பூஜை செய்திருந்ததை பார்த்து சத்தியமூர்த்தி அதிர்ச்சி அடைந்தார். உடலை புதைத்து வைத்தது போல் அடையாளம் இருந்ததால், குருசிலாப்பட்டு போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்தில் ஆய்வு செய்த போலீசார், கோட்டாட்சியருக்கு தகவல் அனுப்பி, பூஜையை செய்தது யார், புதைக்கப்பட்டது என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்