"வாழ்க்கையே முடிஞ்சிடிச்சி அண்னே..." அதி வேகமாக மின்கம்பத்தில் மோதிய இளைஞர்- வெளியான வீடியோ

Update: 2024-07-08 14:38 GMT

ஆறுபாதி கிராமம் வேலாயுதம் தெருவில் வசித்து வந்த மணிவண்ணன் என்ற 20 வயது இளைஞர் பிறந்த நாள் விழாவுக்கு செல்ல செம்பனார் கோவில் நோக்கி மதுபோதையில் அதிவேகத்தில் சென்றுள்ளார்... அப்போது எதிரே வந்த வாகனம் எதிர்பாராத விதமாக மணிவண்ணனின் பைக் மீது மோதியதில் நிலைதடுமாறி காவல் நிலையம் அருகே உள்ள மின் கம்பத்தில் மோதியுள்ளார்... மின் கம்பம் இரண்டாக முறிந்த நிலையில், பலத்த காயமடைந்த மணிவண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆம்புலன்ஸ் விரைந்து வரவில்லை... அருகிலேயே காவல் நிலையம் இருந்தும் போலீசார் உடனடியாக வரவில்லை என உறவினர்கள் குற்றம் சாட்டிய நிலையில் பலியான மணிவண்ணன் இறுதியாக வாழ்க்கையே முடிந்து விட்டது என கூறி கதறும் வீடியோ வெளியாகி பதைபதைப்பூட்டுகிறது...

Tags:    

மேலும் செய்திகள்