எய்ம்ஸ் கட்டுமான பணி..! விருதுநகர் எம்.பி. பரபரப்பு பேச்சு | AIIMS

Update: 2024-07-20 02:10 GMT

எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல்கட்ட கட்டுமான பணிகள் 10 விழுக்காடு முடிந்துள்ளதாக, விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான பொது கலந்தாய்வு கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. மதுரை எய்ம்ஸ் தலைமை செயல் அதிகாரி, ஹனுமந்தாராவ், எய்ம்ஸ் நிர்வாக துணை இயக்குனர் விஜய்குமார் நாயக், மாணிக்கம் தாகூர் எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், கட்டுமானப் பணிகளை நேரில் அனைவரும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர், ராமநாதபுரத்தில் படித்து வரும் எய்ம்ஸ் மாணவர்களை தற்காலிகமாக மதுரைக்கு இடமாற்றம் செய்யும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்