ரயில் நிலையங்களில் சோதனை.. முக்கிய நகரங்களில் அதி தீவிரம்

Update: 2023-12-31 10:45 GMT

காவலர்கள் ஆயிரத்து 500 பேரும், தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்கள் 70 பேரும் இன்று இரவு முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர். எளிதில் தீப்பற்றகூடிய பொருட்களை ரயிலில் எடுத்துச் செல்வதை தடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மெட்டல் டிடக்டர் கருவிகள் மூலம் பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்படுகிறது. சி.சி.டி.வி. கேமராக்கள் வாயிலாக ரயில் நிலையங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் மோப்ப நாய் பிரிவின் மூலம் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்