கணவரின் சடலத்துடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த மனைவி காரணத்தை கேட்டு அதிர்ந்து போன போலீசார்

Update: 2024-10-06 03:14 GMT

தலையில் ரத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்த கணவரின் உடலை காவல் நிலையத்திற்கு எடுத்து வந்த மனைவி மற்றும் அவரது சகோதரரிடம், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் மேலப்புதூர் பகுதியை சேர்ந்த சின்னத்துரை வெளியூரில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்த சின்னத்துரை, தலையில் பலத்த காயத்துடன் வீட்டு வாசலில் கிடந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து அவரது உடலை, சின்னத்துரை மனைவி மாயா, ஆட்டோவில் வைத்து புளியரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றார். அப்போது, நடந்ததை, சின்னத்துரை மனைவி போலீசாரிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த போலீசார் சின்னத்துரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சின்னத்துரையின் மனைவியான மாயா மற்றும் அவரது அண்ணனான மனு ஆகிய இருவர் மீது சந்தேகம் இருப்பதால், அவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்