குடும்பத்தின் கண் முன்னே உடல் நசுங்கி பலி.. சுற்றுலா சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்

Update: 2024-10-06 04:42 GMT

சென்னையை சேர்ந்த தேன்ராஜ் என்பவர், தனது குடும்பத்தினருடன் வேளாங்கண்ணிக்கு காரில் சென்றுள்ளார். கடலூர் மாவட்டம் முதுநகர் அருகே சிப்காட் பகுதியில், தேநீர் அருந்துவதற்காக கார் நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது கார் கதவை திறந்து சாலையில் இறங்கிய தேன்ராஜ் மீது, அரசு விரைவுப் பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது. அதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே தேன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்