திருச்செந்தூர் சென்று வீடு திரும்புவதற்குள் நின்ற உயிர் - தூக்கத்திலேயே துடித்த பரிதாபம்

Update: 2024-09-25 09:31 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர், திருச்செந்தூருக்கு வேன் மூலம் கோயில் சுற்றுலா சென்று விட்டு உளுந்தூர்பேட்டை வழியாக சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். மேட்டத்தூர் என்ற இடத்தில், கனமழை காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் , சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 16 பேர் படுகாயமடைந்தனர். விபத்தில் சிக்கியவர்களை பொதுமக்கள் மீட்டு, விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலங்களை போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை போலீசார் சரிசெய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்