டீச்சரை அடித்து விரட்டிய தாளாளர்..இரக்கமேயின்றி கம்பால் தாக்குதல்

Update: 2024-09-25 11:26 GMT

டீச்சரை அடித்து விரட்டிய தாளாளர்..இரக்கமேயின்றி கம்பால் தாக்குதல் - "அம்மா.. அம்மா.." அலறி ஓடிய பிஞ்சு

தஞ்சை அருகே சம்பள பணத்தை கேட்ட ஆசிரியரை கம்பால் அடித்து விரட்டிய தனியார் பள்ளி தாளாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுாரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியின் தாளாளர் மாதவன், சம்பள பாக்கியை கேட்ட ஆசிரியர் ரஞ்சிதாவை அடித்து விரட்டியுள்ளார். மேலும் ரஞ்சிதாவின் கணவர் மற்றும் குழந்தையையும் அவர் அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவில் ரஞ்சிதாவின் சிறுவயது மகன் அழுதுக்கொண்டு ஓடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்