சாலையில் 3 பேரை நிர்வாணப்படுத்தி சரமாரி வெட்டு.. ஒரு போலீஸ் ஸ்டேஷனே கூண்டோடு டிரான்ஸ்பர்

Update: 2024-07-04 06:26 GMT

சீர்காழியில் பட்டப் பகலில் 3 பேர் வெட்டப்பட்ட வழக்கில், காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உட்பட 7 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

சீர்காழியில் முன்விரோதம் காரணமாக மதன், அவரது சகோதரர் சுரேஷ் மற்றும் உறவினர் மணிகண்டன் ஆகியோரை பட்டப்பகலில் ஒரு கும்பல் சரமாரியாக வெட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, ராஜா, விக்னேஷ் உட்பட 4 பேரை கடந்த 29ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அருண்குமார், செந்தில்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் நடவடிக்கை எடுக்காமல் பணியில் மெத்தனமாக செயல்பட்டதாக, சீர்காழி காவல் ஆய்வாளர் சிவக்குமார் மயிலாடுதுறை ஆயுதப்படைக்கும், உதவி ஆய்வாளர் அசோக் குமார் குத்தாலம் காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி மீனா உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்