மனு கொடுக்க வந்த இடத்தில் வாக்குவாதம்.. தாசில்தார் அலுவலகத்தை பரபரப்பாக்கிய பெண்கள்

Update: 2024-06-11 16:31 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே, வட்டாட்சியரை முற்றுகையிட்டு கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கஞ்சியேந்தல் கிராமத்தில், 200 குடும்பங்களைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில், 150 நபர்கள் 100 நாள் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், 100 நாள் பணி செய்து வந்த 41 பேர் நீக்கப்பட்டதை கண்டித்து, 100க்கும் மேற்பட்ட பெண்கள், பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். அப்போது, வட்டாட்சியரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்