"அச்சம் தேவையில்லை... தமிழ்நாடு அரசு எதிராக செயல்படாது" - சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி

Update: 2024-02-17 10:37 GMT

தனியார் நிறுவனங்களிலும் தமிழ்நாட்டினர் தான் தூய்மைப் பணியாளர்களாக பணிபுரிகிறார்கள் எனவும் தொழிலாளர்களுக்கு எதிராக தமிழ்நாடு அரசு செயல்படாது என்பதால் தூய்மைப் பணியாளர்கள் தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்... பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் ராதாகிருஷ்ணன் இவ்வாறு தெரிவித்தார்... கேரள விளையாட்டு வீரர்கள் அமைப்பு மற்றும் இந்துஸ்தான் கல்லூரி இணைந்து ஒருங்கிணைக்கும் பள்ளி - கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான நீச்சல் போட்டிகள் சென்னை, முகப்பேரில் உள்ள டால்பின் நீச்சல் பயிற்சி மையத்தில் நடைபெறும் நிலையில், துவக்க விழாவில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்...

Tags:    

மேலும் செய்திகள்