மின்னல் வேகத்தில் தட்டி தூக்கப்பட்ட பொங்கல் ரயில் டிக்கெட்டுகள்.. அதிர்ச்சியில் மக்கள்

Update: 2024-09-12 08:49 GMT

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் ஜனவரி 10-ஆம் தேதி ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு நிறைவுபெற்றது. IRCTC செயலி மூலம், முன்பதிவு மையங்களில் டிக்கெட் விற்பனை நடைபெற்றது. எனினும், ஆன்லைனில் சில நிமிடங்களிலேயே பெரும்பாலான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கவுன்டரில் காலை முதலே காத்திருந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். வரும் ஜனவரி11-ம் தேதி பயணிக்க நாளையும், ஜனவரி12-ம் தேதி பயணத்துக்கு வரும் 14-ம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்