திருவிழாவில் அலறல் சத்தம்.. கேட்டாலே குலைநடுங்கும்.. போனில் பதிவான காட்சி.. ஊரே அதிர்ச்சியில்

Update: 2024-07-16 05:50 GMT

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே கோயில் திருவிழா கூட்டத்திற்குள் டிராக்டர் புகுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார். 5 பெண்கள் காயமடைந்துள்ளனர்.

போளூரை அடுத்த அத்திமூர் கிராமத்தில் அய்யனார் திருவிழாவை ஒட்டி, அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் பொங்கல் வைத்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது ஜமுனாமரத்தூரில் இருந்து அதிவேகமாக வந்த டிராக்டர், பாலத்தின் மீது அமர்ந்து, வாண வேடிக்கையை பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் கூட்டத்துக்குள் புகுந்துள்ளது.

இதில், பிரகாஷ் என்பவரின் மனைவி செம்பருத்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த 9 பேர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே, கிராம மக்கள் தாக்கியதில் காயமடைந்த டிராக்டர் ஓட்டுனர் அஜித்குமார் மற்றும் ஜீவா ஆகிய இருவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த பெண்ணுக்கு 3 குழந்தைகள் இருக்கும் நிலையில், அவர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, கிராம மக்கள், போளூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்