பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன்

Update: 2024-10-26 14:27 GMT

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 31வது பட்டமளிப்பு விழா, ஆளுனர் ஆர்.என் ரவி தலைமையில் இன்று நடைபெற்றது. தமிழக உயர் கல்வித்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான கோவி செழியன் இந்த விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பு செய்தார். 33 ஆயிரத்து 821 பேர் பட்டம் பெறும் நிலையில், 571 மாணவர்களுக்கு நேரடியாக ஆளுனர் பட்டங்களை வழங்கினார். இந்த பட்டமளிப்பு விழாவில் தங்கபதக்கம் பெற்ற 111 பேரில், 97 பேர் பெண்கள் என்பதும், முனைவர் பட்டம் பெற்ற 460 பேரில், 377 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடதக்கது.

Tags:    

மேலும் செய்திகள்